துரைப்பாக்கம்: தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் கோபாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அகாடமி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி மைய துவக்க விழா கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவரும், அமெட் பல்கலைக்கழக வேந்தருமான நாசே ஜெ.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு யாதவ சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ், அமெட் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம், தமிழ்நாடு யாதவ மகா சபை மாநில சட்டச் செயலாளர் சபாபதி, மாநில பொருளாளர் எத்திராஜ், தமிழ்நாடு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், நாசே ராஜேஷ், ராமச்சந்திரன், சுசீலா ராமச்சந்திரன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் செந்தாமரைக்கண்ணன், பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மூத்த வழக்கறிஞர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.